Tuesday, December 18, 2018

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்

புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே

எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே

(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்

பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்

ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்

(புல்லாங்குழல்)



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த

பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்

படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்

(புல்லாங்குழல்)

No comments:

Post a Comment

Introduction to Bioinformatics

Bioinformatics: Introduction and Applications What is Bioinformatics? Bioinformatics is an interdisciplinary field that combines biology, co...